முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

க்ரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் ஐந்துவிதமான நன்மைகள்

க்ரீன் டீ தற்போது எல்லோராலும் அதிகம் விரும்பப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. ஒரு கோப்பை க்ரீன் டி குடிப்பது பத்து ஆப்பிள் பழச்சாறு குடிப்பதற்கு சமமானது. இது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புதிய செல்களை உற்பத்தி செய்து நமது வாழ்நாளை அதிகரிக்கிறது. இதனை பொடியாக வாங்காமல் இலையாக வாங்கி பயன்படுத்துவது சிறந்தது. இதை 12 வயதிற்க்கு மேல் உள்ளவர்கள் அனைவரும் பருகலாம். இது 12 வயதிற்கு கீழ் உள்ளவர்களின் மெட்டபாலிசத்தை பாதிக்கும். இதனை அருந்துவதால் கீழ்கண்ட நன்மைகள் ஏற்படும்.

  1. உடல் எடையை குறைக்கும்
  2. சர்க்கரையின் அளவை சமன்படுத்தும்
  3. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
  4. புற்று நோயை தடுக்கும்
  5. வாய் துர்நாற்றம் மற்றும் சொத்தை பல் வரமால் தடுக்கும்



உடல் எடையை குறைக்கும்

க்ரீன் டீ குடிப்பதனால், அதில் உள்ள மூலப்ப்பொருள் நம் உடம்பில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச்செய்து உடல் எடையை மற்றும் தொப்பையை குறைக்க உதவுகிறது. க்ரீன் டீ குடிப்பதனால் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்பு எனப்படும் LDI-ஐ கரைக்கிறது. இதனால் நமக்கு  உடல் எடை சீரான நிலைக்கு வருகிறது. இதனை குடிப்பதனால், குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாத விடாய் பிரச்சனைகள் குறைந்து சீராக அமையும். இதனை உடல் பருமன் உள்ளவர்கள், காலை மற்றும் மாலை இரண்டு வேளையும் குடிப்பதனால் முதல் பத்து நாட்களிலேயே உடல் எடை குறைவதை அவர்களால் நன்கு உணர முடியும். க்ரீன் டீ குடிப்பதனால் முகச்சுருக்கங்கள் நீங்கி முகம் பொழிவு பெறும். க்ரீன் டீயை தேன் அல்லது சர்க்கரை சேர்த்து எப்பொழுதும் குடிக்க கூடாது, அப்படி குடித்தால் அது உடம்பில் உள்ள நச்சு தன்மையை வெளியேற்றாது. க்ரீன் டீயை அதனுடைய சுவையான துவர்ப்பு தன்மையோடு குடித்து பழக வேண்டும். அப்படி குடித்து வந்தால் நமக்கு நல்ல பயன்கள் கிடைக்கும். இதனை 12 வயதிற்கு மேல் 15 வயதிற்குள் உள்ளவர்கள் ஒரு வேளை குடித்தால் போதுமானது. இதை, எப்பொழுதும் வெறும் வயிற்றில், குடிக்க கூடாது. காலை 10-11 மற்றும் மாலை 3-4 குடித்து வரலாம்.

சர்க்கரையின் அளவை சமன்படுத்தும்

சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலும் தேனீர் அல்லது காஃபி குடிப்பதையே விரும்புவார்கள், அது அவர்களின் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும். அதற்க்கு பதிலாக க்ரீன் டீ எடுத்துக்கொண்டால், அது நமது உடம்பில் உள்ள இன்சுலின் சுரப்பியை சீராக சுரக்க உதவி செய்து சர்க்கரையின் அளவை சீராக வைக்கிறது. சர்க்கரை நோயினால் நமது பாதங்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் புண்களை குணமாக்கும். வயது முதிர்ன்ஹாவார்கள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களலால் தினமும் நடை பயிற்சி செய்ய இயலாது, அதனால் இவர்களுக்கு க்ரீன் டீ அதிக நன்மையை தருகிறது. உடலில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருந்தால் நம்மை நாம் பல நோய்களில் இருந்து தற்காத்துகொள்ளலலாம். இதனை சர்க்கரை நோயாளிகள் குடிப்பதனால், தங்களின் சர்க்கரை மாத்திரையின் அளவை குறைத்து கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இதனால் அவர்களின் சிறுநீரகம் பாதிப்பதை தவிர்க்க இயலும்.


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

க்ரீன் குடிப்பதனால் நமது உடம்பில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றி புதிய செல்களை உற்பத்தித்தி செய்து, நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதனால் ஏற்படும் அலர்ஜி, தும்மல் மற்றும் தோல் சம்மந்தப்பட்ட நோய்கள் குறைய வழிவகுக்கும். நாள்தோறும், இதனை குடிப்பதனால் சுறுசுறுப்பாகவும் மற்றும் நலமாகவும் வாழலாம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உயர்ந்தால் , மழை களங்களில் வரும், பல விதமான காய்ச்சலில் இருந்து நம்மை பாதுகாக்க இயலும்.

புற்று நோயை தடுக்கும்

க்ரீன் டீ குடிப்பதனால் நம்மை புற்று நோய் வராமல் பாதுகாக்க முடியும். இப்போது இருக்கும் உணவு பழக்கவழக்கம் நமக்கு பலவிதமான நோய்களை வரவழைக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு, தைராய்டு மற்றும் அதன்மூலம் வரக்கூடிய தொண்டை புற்று நோய், மார்பாக புற்று நோய் மற்றும் கர்ப்பப்பை புற்று நோயினால் அதிகம் பாதிக்க படுகின்றனர். க்ரீன் டீ குடிப்பதனால் உடலில் உள்ள ஹார்மோன்கள் சீரான முறையில் சுரக்கிறது, அதனால் புற்று நோயிலிருந்து பாதுகாக்க முடியும்.

வாய் துர்நாற்றம் மற்றும் சொத்தை பல் வரமால் தடுக்கும்

க்ரீன் குடிப்பவர்களுக்கு நாள்பட்ட வாய் துர்நாற்றம் குறைந்து நல்ல பயனை அளிக்கிறது. அதிலுள்ள கசப்புத்தன்மை சொத்தை பல் வராமல் தடுக்கிறது மற்றும் பற்கள் பளபளப்பாக இருக்கும். மேலும் பற்களில் உள்ள நோய் கிருமிகளை அழித்து பற்களை ஆரோக்கியமாக வைக்கிறது. நாளடைவில் பற்களின் ஈறுகள் ஆரோக்கியமாக இருப்பதினால் பற்கூச்சமும் ஏற்படாமல் இருக்கும்.

க்ரீன் டீயை தவிர்க்க வேண்டியவர்கள்

நல்ல உடல் நலத்தை கொடுக்க கூடிய க்ரீன் டீயை சிலர் தவிர்க்க வேண்டியும் உள்ளது. கீழ்கண்டவர்கள், க்ரீன் டீயை தவிர்ப்பது நல்லது.

  • இரத்தசோகை உள்ளவர்கள்
  • கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்
  • இதய நோயாளிகள் (மருத்துவரின் ஆலோசனைபடி குடித்துகொள்ளலலாம்)
  • நல்ல உடல்நலத்தோடு உள்ளவர்கள், குறைவான அளவில் எடுத்துக்கொள்வது சிறந்தது

கிரீன் டீ தயாரிக்கும் முறை


க்ரீன் டீ செய்வது மிகவும் எளிது. ஒரு கோப்பை க்ரீன் டீ தயாரிக்க கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்.

  1. 150 மில்லி நீரை கொதிக்க வைக்கவும்
  2. அடுத்து, ஒரு கோப்பையில் கொதித்த நீரை ஊற்றவும்
  3. பின்னர் ஒரு க்ரீன் டீ bag அல்லது தேவையான அளவு இலைகளை கோப்பையில் போடவும்
  4. இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் ஊறிய பிறகு இலைகளை அல்லது டீ bag ஐ எடுத்து விடவும்
  5. தற்போது ஆரோக்கியமான க்ரீன் டீ பருகுவதற்கு தயார்.

கிரீன் டீ இலை எங்கு கிடைக்கும்

க்ரீன் டீ எங்கு வாங்கலாம்?. தற்போது பெரும்பாலான கடைகளில் நல்ல க்ரீன் டீ கிடைக்கிறது. உங்களுடைய அருகாமை கடைகளில் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் இணையத்தின் மூலமாகவும் வாங்கமுடியம். தற்பொழுது, இந்தியாவில் அமேசான் இணையத்தளம், வீட்டிற்க்கே க்ரீன் டீயை கொடுக்கிறது. நீங்கள் ஆன்லைனில் க்ரீன் டீ வாங்க, கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவது எப்படி

நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நுரையீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது உடலில் ஆக்ஸிஜனின் அளவு சமமான நிலையில் இருக்கும் பொழுது நம்முடைய சுவாசம் சீரான நிலையில் இருக்கும். ஆஸ்துமா, அலர்ஜி போன்ற நோயிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள சில வழிமுறைகளைக் காண்போம். வெந்நீர் உடலை வெதுவெதுப்பாக வைத்திருத்தல் உணவு முறைகளில் சில மாற்றங்கள் வீட்டுமுறை மருத்துவம் மூச்சுப்பயிற்சி வைட்டமின் டி உணவுகள் வெந்நீர் மழைக்காலம் மற்றும் குளிர்காலம் துவங்குவது முதல், முடியும் வரை எப்பொழுதும் வெதுவெதுப்பான நீரை பயன்படுத்துவது நல்லது. இது எப்பொழுதும் தும்மல் மற்றும் இருமல் வருவதை கட்டுப்படுத்தும். முடிந்த அளவு வெந்நீரில் கொதிக்க வைக்கும்போது, அதில் மிளகு, சீரகம் சிறிதளவு சேர்த்து வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால் தொண்டையில் உள்ள குவளை மற்றும் நுரையீரலில் உள்ள சளி படிப்படியாக குறையும். பிறகு கை, கால் மற்றும் முகம் கழுவுவதற்கு வெந்நீரையே பயன்படுத்த வேண்டும். இல்லதரசிகள் தங்களுடைய வீட்டை தூய்மை  செய்வதன் மூலம் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதற்கு அவர்கள் ஒட்டடை அடிக்கும் பொழுது முகக்கவசம் அணிவதன் மூல

அழகான சிறிய ரங்கோலி

ரங்கோலி, போடுவதற்கு மிகவும் எளிமையானது. சிறுவர்களும் எளிமையாக கற்றுக்கொள்ளலாம். ரங்கோலி கற்றுக்கொண்டால், மெகந்தி போடுவது எளிமையாக இருக்கும். இதில் பார்டர் கோலம், தோரணக்கோலம் என்று நமது விருப்பத்திற்கேற்ப வடிவமைத்துக்கொள்ளலாம். ரங்கோலி, புள்ளி வைத்து போடும் கோலத்தை விட மிகவும் எளிமையானது. செவ்வாய் கிழமையில் நட்சத்திரம் கோலம் போடுவது முருகனுக்கு உகந்தது. ரங்கோலிக்கு நிறம் கொடுக்கும்போது, அடர்த்தியாகவும்(Dark Colour) மற்றும் மிதமாகவும்(Light Colour) கொடுக்கவேண்டும். அப்படி கொடுக்கும்போது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். பார்டர் கோடு எப்பொழுதும், கோலம் முழுவதும் ஒரே நிறமாக இருந்தால்,அனைவரின் கண்கள் கவரும் வண்ணம் இருக்கும்.