ரங்கோலி, போடுவதற்கு மிகவும் எளிமையானது. சிறுவர்களும் எளிமையாக கற்றுக்கொள்ளலாம். ரங்கோலி கற்றுக்கொண்டால், மெகந்தி போடுவது எளிமையாக இருக்கும். இதில் பார்டர் கோலம், தோரணக்கோலம் என்று நமது விருப்பத்திற்கேற்ப வடிவமைத்துக்கொள்ளலாம். ரங்கோலி, புள்ளி வைத்து போடும் கோலத்தை விட மிகவும் எளிமையானது. செவ்வாய் கிழமையில் நட்சத்திரம் கோலம் போடுவது முருகனுக்கு உகந்தது. ரங்கோலிக்கு நிறம் கொடுக்கும்போது, அடர்த்தியாகவும்(Dark Colour) மற்றும் மிதமாகவும்(Light Colour) கொடுக்கவேண்டும். அப்படி கொடுக்கும்போது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். பார்டர் கோடு எப்பொழுதும், கோலம் முழுவதும் ஒரே நிறமாக இருந்தால்,அனைவரின் கண்கள் கவரும் வண்ணம் இருக்கும்.