முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுவையான ஆட்டு குடல் கிரேவி

எப்படி சுத்தம் செய்வது 


ஒரு பாத்திரத்தில் 3 லிட்டர் தண்ணீர் ஊற்றி சூடாக்கிக் கொள்ளவும், பிறகு அந்த வெந்நீரில் குடலை போட்டு 2 நிமிடம் கிளறவும் இப்பொழுது கூடல் கொஞ்சம் தடிமனாக மாறி நாம் சுத்தம் செய்ய எளிதாக இருக்கும். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு நமக்கு தேவையான முறையில் நறுக்கிக் கொள்ளவும், பின்பு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து 5 முறை நன்றாகக் கழுவிக்கொள்ளவும். இப்பொழுது குடல் பார்ப்பதற்கு பளிச்சென்று தெரியும் இஞ்சி, பூண்டு, மஞ்சள் மற்றும்  உப்பு சேர்த்து குக்க்கரில் 7 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.

தேவையான பொருள்கள்


  • நன்கு சுத்தம் செய்த குடல் கறி - ஒரு கிலோ
  • இஞ்சி பூண்டு தொக்கு - 2 ஸ்பூன்
  • சின்ன வெங்காயம் நறுக்கியது -  ஒரு கப்
  • தக்காளி நறுக்கியது - அரை கப்
  • கருவேப்பிலை, கொத்தமல்லி - இரண்டு கொத்து
  • பச்சைமிளகாய் - 4
  • சீரகம், மிளகு, சோம்பு - தலா அரை ஸ்பூன் பொன்னிறமாக வறுத்து அரைத்துக் கொள்ளவும்
  • மல்லி தூள் - 1 ஸ்பூன்
  • மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
  • உப்பு தேவையான - அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • பட்டை
  • கிராம்பு
  • ஏலக்காய்
  • தேங்காய் அரவை - கால் கப்

செய்யும் முறை


அடுப்பில் கடாயை வைத்து சூடேறிய பின்பு, உங்கள் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்,  பிறகு பட்டை, கிராம்பு, ஏலக்காய் போடவும். அத்துடன் கறிவேப்பிலை, மல்லி இலை மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும், மல்லி இலையை முதலில் போட்டு வதக்கும் போது குடலின் வாசனை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும், சுவையாகவும் இருக்கும். அடுத்து நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து அடிபிடிக்காமல் வதக்கவும். நன்றாக வதங்கிய பிறகு நாம் அரைத்து வைத்த (சோம்பு, சீரகம், மிளகு) பொடியை சேர்க்கவும்.

2 நிமிடம் கழித்து மிளகாய்பொடி மல்லித்தூள் சேர்க்கவும். நாம் குடலில் ஏற்கனவே உப்பு சேர்த்து வேக வைத்து இருப்பதால், தேவைகேற்ப உப்புபோட்டு கிளறி விட்டு, அத்துடன் கொஞ்சம் தண்ணீரையும் ஊற்றி கொள்ளவும். ஒரு ஐந்து நிமிடம் மூடி வைக்கவும் பிறகு அடுப்பை அணைத்து விடவும் இப்பொழுது ருசியான குடல் கிரேவி தயார்.

இந்த குடல்  கிரேவி கீழ்வரும் உணவுகளுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்: 


  • சப்பாத்தி
  • இட்லி
  • தோசை
  • பரோட்டா
  • சாப்பாடு 

மருத்துவப் பயன்கள்

அதிகப்படியான கொழுப்பு இருக்காது, இதனால் இதனை அனைவரும் சாப்பிடலாம். நாம் நன்றாக குக்கரில் வேக வைத்து விட்டதால் மிருதுவாக இருக்கும், குழந்தைகள் விரும்பி உண்பார்கள். முக்கியமாக வயிற்று புண், வாய்ப்புண் நீண்ட நாளாக இருந்தாலும் இதை சாப்பிட்டு வர நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அசைவ பிரியர்களுக்கு கண்டிப்பாக இந்த முறையில் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி உண்பார்கள். அதிகமாக எடுத்துக் கொண்டு அஜீரண கோளாறு ஏற்பட்டால் கொஞ்சம் வெந்நீர் வைத்து அதனுடன் சீரகம் சேர்த்து குடித்தால் நல்லது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

க்ரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் ஐந்துவிதமான நன்மைகள்

க்ரீன் டீ தற்போது எல்லோராலும் அதிகம் விரும்பப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. ஒரு கோப்பை க்ரீன் டி குடிப்பது பத்து ஆப்பிள் பழச்சாறு குடிப்பதற்கு சமமானது. இது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புதிய செல்களை உற்பத்தி செய்து நமது வாழ்நாளை அதிகரிக்கிறது. இதனை பொடியாக வாங்காமல் இலையாக வாங்கி பயன்படுத்துவது சிறந்தது. இதை 12 வயதிற்க்கு மேல் உள்ளவர்கள் அனைவரும் பருகலாம். இது 12 வயதிற்கு கீழ் உள்ளவர்களின் மெட்டபாலிசத்தை பாதிக்கும். இதனை அருந்துவதால் கீழ்கண்ட நன்மைகள் ஏற்படும். உடல் எடையை குறைக்கும் சர்க்கரையின் அளவை சமன்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புற்று நோயை தடுக்கும் வாய் துர்நாற்றம் மற்றும் சொத்தை பல் வரமால் தடுக்கும் க்ரீன் டீயை ஆர்டர் செய்யவும் உடல் எடையை குறைக்கும் க்ரீன் டீ குடிப்பதனால், அதில் உள்ள மூலப்ப்பொருள் நம் உடம்பில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச்செய்து உடல் எடையை மற்றும் தொப்பையை குறைக்க உதவுகிறது. க்ரீன் டீ குடிப்பதனால் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்பு எனப்படும் LDI-ஐ கரைக்கிறது. இதனால் நமக்கு  உடல் எடை சீரான நிலைக்கு வருகிறது. இதனை குடிப்பதனால், குறிப்பாக

ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவது எப்படி

நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நுரையீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது உடலில் ஆக்ஸிஜனின் அளவு சமமான நிலையில் இருக்கும் பொழுது நம்முடைய சுவாசம் சீரான நிலையில் இருக்கும். ஆஸ்துமா, அலர்ஜி போன்ற நோயிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள சில வழிமுறைகளைக் காண்போம். வெந்நீர் உடலை வெதுவெதுப்பாக வைத்திருத்தல் உணவு முறைகளில் சில மாற்றங்கள் வீட்டுமுறை மருத்துவம் மூச்சுப்பயிற்சி வைட்டமின் டி உணவுகள் வெந்நீர் மழைக்காலம் மற்றும் குளிர்காலம் துவங்குவது முதல், முடியும் வரை எப்பொழுதும் வெதுவெதுப்பான நீரை பயன்படுத்துவது நல்லது. இது எப்பொழுதும் தும்மல் மற்றும் இருமல் வருவதை கட்டுப்படுத்தும். முடிந்த அளவு வெந்நீரில் கொதிக்க வைக்கும்போது, அதில் மிளகு, சீரகம் சிறிதளவு சேர்த்து வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால் தொண்டையில் உள்ள குவளை மற்றும் நுரையீரலில் உள்ள சளி படிப்படியாக குறையும். பிறகு கை, கால் மற்றும் முகம் கழுவுவதற்கு வெந்நீரையே பயன்படுத்த வேண்டும். இல்லதரசிகள் தங்களுடைய வீட்டை தூய்மை  செய்வதன் மூலம் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதற்கு அவர்கள் ஒட்டடை அடிக்கும் பொழுது முகக்கவசம் அணிவதன் மூல